நாவன்லி கைது எதிரொலி: ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் கைது

நாவன்லி கைது எதிரொலியால், அவருக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாவன்லி கைது எதிரொலி: ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் கைது
Published on

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கடந்த 30 நாட்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அரசின் ஊழலுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில், அதிபருக்கான போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ள நாவன்லி அவ்வப்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

41 வயதாகும் நாவன்லி அங்கீகரிக்கப்படாத, போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்திய குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் நாடு முழுவதம் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாஸ்கோவில் மட்டும் 823 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com