

விமானச் சேவை இடையூறை தொடர்ந்து மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் விமான கட்டண உச்சவரம்பை நிர்ணயித்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு இதனை திடீரென நீக்கம் செய்தது.
மேலும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் வருகிற 1-ந்தேதி முதல் விமான கட்டணம் தாறுமாறாக உயரும் வாய்ப்பு நிலவுகிறது. இதனை மத்திய சிவில் போக்குவரத்துத்துறை மந்திரி ராம் மோகன் நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்.