பேருந்தில் குடும்ப புகைப்படம்- சாலை விபத்துகளை தடுக்க உ.பி அரசு புதிய யுக்தி

ஆந்திராவில் சாலை விபத்துகள் வெற்றிகரமாக குறைந்துள்ளது.சாலை விபத்துகள் 4.7 சதவீதம் அதிகரித்து 2023ல் 23,652 ஆக உயர்ந்துள்ளது.
பேருந்தில் குடும்ப புகைப்படம்- சாலை விபத்துகளை தடுக்க உ.பி அரசு புதிய யுக்தி
Published on

சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க உத்தரபிரதேச போக்குவரத்து துறை புதிய உத்தியை கையாண்டுள்ளது.

அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தங்கள் குடும்பத்தினரின் படத்தை டாஷ்போர்டில் வைக்குமாறு போக்குவரத்து ஆணையர் சந்திர பூஷன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடும்பப் படங்களைக் வைக்கும் யோசனை ஆந்திராவில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று போக்குவரத்து முதன்மைச் செயலாளர் எல்.வெங்கடேஷ்வர் லு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும்," இது ஓட்டுநர்களுக்கு அவர்களின் குடும்பங்களை நினைவூட்டும் மற்றும் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்ட அவர்களை ஊக்குவிக்கும்.

இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் சாலை விபத்துகள் வெற்றிகரமாக குறைந்துள்ளது.

கடந்த 2022ல் 22,596 ஆக இருந்த சாலை விபத்துகள் 4.7 சதவீதம் அதிகரித்து 2023ல் 23,652 ஆக உயர்ந்துள்ளது. அதனால், சாலை விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை புதுமையான தீர்வுகளை தேட தூண்டியது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com