search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவியை கடத்தி சென்று லெஸ்பியனில் ஈடுபட்ட டியூசன் ஆசிரியர்- போக்சோவில் கைது
    X

    மாணவியை கடத்தி சென்று லெஸ்பியனில் ஈடுபட்ட டியூசன் ஆசிரியர்- போக்சோவில் கைது

    • மாணவியின் பெற்றோர், திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர்.
    • போலீசார் விசாரித்தபோது, இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறியிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    பிளஸ்-2 படிப்பதால் அவரது பெற்றோர் மாணவிக்கு டியூசன் ஏற்பாடு செய்தனர். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரை ஏற்பாடு செய்தனர். அந்த ஆசிரியை தினமும் மாணவி வீட்டிற்கு சென்று மாணவிக்கு பாடங்களை சொல்லி கொடுத்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பள்ளிக்கு சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியின் தோழிகளிடம் விசாரித்தனர். அப்போது மாணவியை அவரது டியூசன் ஆசிரியை பள்ளிக்கு வந்து அழைத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர், திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடினர். மேலும் அவரது டியூசன் ஆசிரியையின், செல்போன் எண் மூலம் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    இதில் அவர்கள் எர்ணாகுளம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார், நேற்று அங்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் பிடித்தனர்.பின்னர் அவர்களை திருவனந்தபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ பரிசோதனையில் மாணவி, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, இருவரும் லெஸ்பியன் ஜோடியாக மாறியிருப்பது தெரியவந்தது. ஆசிரியை, டியூசன் எடுக்க மாணவியின் வீட்டுக்கு சென்ற போது அவர்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டதும் தெரியவந்தது.

    இதுபற்றி மாணவி கூறும்போது, ஆசிரியை தன்னை கடத்தி செல்லவில்லை என்றும், தானே விருப்பப்பட்டு அவருடன் சென்றதாகவும் கூறினார்.

    மாணவி, ஆசிரியையுடன் விருப்பப்பட்டு சென்றாலும், மாணவி மேஜர் ஆகாததால், அவரை ஆசிரியை கடத்தி சென்றதாக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டு, ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

    ஏற்கனவே கேரளாவை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி, கோர்ட்டு உத்தரவுப்படி இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள். இதுபோல இன்னொரு பெண், தனது லெஸ்பியன் ஜோடியை பெற்றோர் கடத்தி சென்றுவிட்டதாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இப்போது பள்ளி மாணவியை, அவருக்கு டியூசன் எடுத்த ஆசிரியையே கடத்தி சென்றதும், இருவரும் லெஸ்பியனில் ஈடுபட்டதும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×