மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகியவை மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.அரசியல் காரணங்களுக்காக மேற்கண்ட மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கின்றன.
மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி மும்மொழி பாடத்திட்ட கொள்கையை அனைத்து மாநில அரசுகளும் ஏற்று அமல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

தேசிய கல்வி கொள்கை என்பது அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை எளிய பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த பள்ளி குழந்தைகள் இலவசமாக கற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை திட்டம்.

இதனை அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்க மறுக்கின்றன. மத்திய அரசு கொண்டுவரும் சட்ட திட்டம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்துவது என்பது மட்டுமின்றி, அத்தகைய கொள்கையை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

இலவச கல்வி என்பது அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமை. இந்தத் திட்டத்தை ஏற்க மறுப்பதினால் மாநில அரசு, சம்பந்தப்பட்ட பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com