செந்தில் பாலாஜி வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறப்பு நீதிமன்றத்தில் அஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க நீதிபதிகள் மறுப்பு.செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்- நீதிபதிகள்.
செந்தில் பாலாஜி வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

தமிழக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில் குற்ற வழக்கு பதிய கவர்னர் அனுமதி அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டது.

ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்ட பாலாஜி என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிட வேண்டும். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்குறிஞரை நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "செந்தில் பாலாஜி ஊழல் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளர் வாயிலான எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி அளிக்கும் நிலவர அறிக்கை செப்டம்பர் 30-ந்தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தது.

மேலும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அஜராகும் வகையில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் வழக்கை 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com