என் மலர்
இந்தியா

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றி, இந்திய விண்வெளி திட்டத்தின் புதிய வரலாற்று மைல்கல்- குடியரசு தலைவர்
- 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
- ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதைதொடர்ந்து, விண்வெளியில் 2 யெற்கைக்கோள்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.
2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " இந்தியாவின் விண்வெளி திறன்களை உயர்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியானது, இந்திய விண்வெளி திட்டத்தில் புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது" என்றார்.






