search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடிநீர் பிரச்சனையால் காங்கிரசுக்கு புதிய சிக்கல்
    X

    குடிநீர் பிரச்சனையால் காங்கிரசுக்கு புதிய சிக்கல்

    • ஏரிகளில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.
    • குடிநீர் பிரச்னையை பிஆர்எஸ் கட்சி பெரிதாக பேசுகிறது.


    தெலுங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வரானார். லோக்சபா தேர்தலிலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.

    தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 லோக்சபா தொகுதிகளில் 14ல் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறது.

    இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறை தெலுங்கானாவில் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக வற்றி வருவது காங்கிரஸ் ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    தலைநகர் ஐதராபாத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் உஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர் ஆகிய இரண்டு ஏரிகளிலும் அதன் கொள்ளளவில் 60 சதவீதம் தண்ணீரே உள்ளது.

    அதேபோல், மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நாகார் ஷூன சாகர், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் ஆகியவற்றிலும் அதன் கொள்ளளவில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது.

    தெலுங்கானாவில் இப்போதே ஆங்காங்கே தலைகாட்டத் தொடங்கியுள்ள குடிநீர் பிரச்னையை பிஆர்எஸ் கட்சி பெரிதாக பேசுகிறது.

    இந்த ஆண்டு தெலுங்கானாவில் மழைப்பொழிவு குறையவில்லை. ஆனாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்றால் அது மாநில அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்ற பிஆர்எஸ் கட்சியின் குற்றச்சாட்டி வருகிறது.

    இது மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×