உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் - முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

உத்தர பிரதேச மாநிலந்த்தில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு
Published on

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இதற்கிடையே, முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர்.

தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.79 சதவீதம் பதிவாகின என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com