ஜூன் 4-ந்தேதி சூரியன் புதிய விடியலை கொண்டு வரப்போகிறது- ராகுல் காந்தி

இதுவரை நடந்த ஓட்டுப்பதிவின் படி இந்தியா கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்க போகிறது. கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க வந்துள்ளீர்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
ஜூன் 4-ந்தேதி சூரியன் புதிய விடியலை கொண்டு வரப்போகிறது- ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. 57 தொகுதிகளுக்கான 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இதுவரை நடந்த ஓட்டுப்பதிவின் படி இந்தியா கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்க போகிறது. கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க வந்துள்ளீர்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

இன்று பெருந்திரளாக வந்து ஆணவம் மற்றும் கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறியுள்ள இந்த அரசுக்கு இறுதி அடியாக உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஜூன் 4-ந்தேதி சூரியன் நாட்டில் புதிய விடியலை கொண்டு வரப்போகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com