search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலவில் சல்ஃபர்- கூடவே இத்தனை தனிமங்கள் இருக்கு: உறுதிப்படுத்திய பிரக்யான் ரோவர்!
    X

    நிலவில் சல்ஃபர்- கூடவே இத்தனை தனிமங்கள் இருக்கு: உறுதிப்படுத்திய பிரக்யான் ரோவர்!

    • விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது.
    • பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சல்ஃபர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்து இருக்கிறது. இத்துடன் நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது.

    பிரக்யான் ரோவரில் உள்ள லேசர்-இன்ட்யூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோ-ஸ்கோப் (Laser-Induced Breakdown Spectroscope) என்ற கருவி நிலவில் தனிமங்கள் இருப்பதை கண்டறிந்து உறுதிப்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×