search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாநதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு
    X

    மகாநதி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு

    • ஆற்றில் திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர்.
    • அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவவை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உமரியா மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு மகாநதி ஆற்றில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட மூன்று பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, ஆற்றில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக மூன்று பேரும் அடித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு படையினரின் உதவியுடன் ஒருவரை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், போலீஸ் கான்ஸ்டபிள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    மகாநதி ஆற்றின் அருகே, 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் கான்ஸ்டபிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்ட கான்ஸ்டபிள் பெயர் ப்ரிடாம பைகா (23) எனவும், அவருடன் அற்றில் அடித்துச் செல்லப்பட்ட 12 வயது சிறுவனை தேடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×