search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிபுரா சட்டசபை தேர்தல்: தங்களது கடமையை நிறைவேற்ற இளைஞர்கள் முன்வரவேண்டும்- பிரதமர் மோடி
    X

    திரிபுரா சட்டசபை தேர்தல்: தங்களது கடமையை நிறைவேற்ற இளைஞர்கள் முன்வரவேண்டும்- பிரதமர் மோடி

    • மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வரும்படி பிரதமர் மோடி அழைப்பு.

    வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    அதுன்படி, திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் சாதனை ஏற்படுத்தும் வகையில் வாக்களிக்க வரும்படி பிரதமர் மோடி, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திரிபுரா மக்கள் சாதனை அளவாக அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருகை தந்து, ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். தேர்தலில், தங்களது கடமையை நிறைவேற்ற வரும்படி இளைஞர்களை தனிப்பட்ட முறையில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×