பயங்கரவாதிகள் ஊடுருவல் வழக்கு- ஜம்முவில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உதவினர்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் வழக்கு- ஜம்முவில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக ஜம்முவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, உதம்பூர், ரம்பவின் கிஷ்த்வார் ஆகிய பகுதிகளில் உள்ள 9 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உதவினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com