search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோவின் புது அப்டேட்
    X

    நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோவின் புது அப்டேட்

    • நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
    • விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது.

    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

    முன்னதாக நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள ஐ.எல்.எஸ்.ஏ. (ILSA) கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்து இருப்பதாக இஸ்ரோ தெரவித்து இருக்கிறது. நிலவில் ஏற்பட்ட அதிர்வு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அறிவித்து உள்ளது. ஐ.எல்.எஸ்.ஏ. கருவியானது பெங்களூருவில் டிசைன் செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×