search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சார்ஜ் செய்யும்போது விபத்து- ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 7 மின்சார பைக்குகள் தீயில் கருகின
    X

    சார்ஜ் செய்யும்போது விபத்து- ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 7 மின்சார பைக்குகள் தீயில் கருகின

    • பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பற்றி பைக்குகள் எரிந்து நாசாமானது.

    மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூம். இங்கு, ஏராளமான இ பைக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின. நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

    விபத்து குறித்து தீயணபை்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் எரிந்து நாசாமானது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×