மும்பையில் தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

பணமோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வீட்டிலும் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை நடத்தியது.
தாவூத் இப்ராஹிம் சகோதரி வீடு
தாவூத் இப்ராஹிம் சகோதரி வீடு
Published on

இந்நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் இன்று 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத சொத்துக் குவிப்பு ஒப்பந்தம் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின் ஒரு பகுதியாக, பணமோசடி வழக்கு தொடர்பாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனா பார்கரின் வீட்டிலும் அமலாக்க இயக்குனரகம் அதிரடி சோதனை நடத்தியது.

இதில் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக மேலும் சோதனைகள் நடத்தப்படலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com