search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிமுக பொதுக்குழு விவகாரம்- 5வது நாளாக விசாரணை தொடங்கியது
    X

    அதிமுக பொதுக்குழு விவகாரம்- 5வது நாளாக விசாரணை தொடங்கியது

    • ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல.
    • ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் கடந்த 6ம் தேதி மூன்றாவது நாளாக நடைபெற்றது.

    தொடர்ந்து, நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்னிலையில் 4வது நாளாக விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று 5வது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது. இதில் இரட்டை தலைமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பனரா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல.

    ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய பொதுக்குழுவே, அவற்றை ரத்து செய்துள்ளது என்று அதிமுக கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

    Next Story
    ×