search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு கடந்து வந்த பாதை
    X

    10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு கடந்து வந்த பாதை

    • மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.
    • பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:-

    ஜன-8, 2019: அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஜன-9: மேல்சபையில் 103-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஜன-12: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக சட்ட அமைச்சகம் அறிவித்தது.

    பிப்: இந்த புதிய சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    பிப்-6: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    பிப்-8: 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது.

    செப்-8, 2022: மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.

    செப்-13: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

    நவ-7: பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    Next Story
    ×