search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் விமானம், ரெயில் சேவை பாதிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் விமானம், ரெயில் சேவை பாதிப்பு

    • டெல்லியில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
    • பனிமூட்டம் காரணமாக ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. தலைநகர் டெல்லியில் காலை வேளையில் வெப்ப நிலை 3.6 டிகிரி செல்சியசுக்கும் கீழ் செல்வதால் கடுமையான குளிர் காணப்படுகிறது.

    இதற்கிடையே, கடுமையான பனி மற்றும் குளிர் காரணமாக வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் ஒரு சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடும் பனி மூட்டத்தால் 50 மீட்டருக்கும் குறைவாக உள்ள தொலைவு மட்டுமே கண்ணுக்கு புலப்பட்டால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 50-200 மீட்டர் வரை தெரிந்தால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 20க்கும் மேற்பட்ட ரெயில்கள் தாமதமாகின. 10க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை, புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டன.

    Next Story
    ×