search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி கவலை
    X

    அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி கவலை

    • நாம் கனவு காணும் இந்தியாவின் அடையாளம் என்னவாக இருக்கும் என்று இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்?
    • உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப உணர்வுபூர்வமான விஷயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி:

    இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12, ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி நேற்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    நாம் கனவு காணும் இந்தியாவின் அடையாளம் என்னவாக இருக்கும் என்று இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்? வாழ்க்கையின் தரமா அல்லது உணர்ச்சிகள் மட்டும்தானா? ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பும் இளைஞர்களா அல்லது வேலை செய்யும் இளைஞர்களா? அன்பா அல்லது வெறுப்பா?

    இன்று, உண்மையான பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப உணர்வுபூர்வமான விஷயங்கள் அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

    அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்துக்கு மத்தியில், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஆனால் அரசாங்கமோ அமிர்த காலம் கொண்டாடுகிறது.

    அதிகாரத்தின் ஆணவத்தில் போதையில் இருக்கும் பேரரசர், அடிப்படை யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்.

    அதனால்தான், இந்த அநீதிப் புயலில் நீதியின் சுடரை எரிய வைக்க, சுவாமி விவேகானந்தரின் போதனைகளிலிருந்து உத்வேகம் பெற்று, நீதிக்கான உரிமை கிடைக்கும் வரை, கோடிக்கணக்கான இளம் 'நியாயோதா'க்கள் என்னுடன் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை வெல்லும், நீதி வெல்லும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    Next Story
    ×