search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துப்பாக்கிச்சூடு எதிரொலி: மணிப்பூரில் 11 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
    X

    துப்பாக்கிச்சூடு எதிரொலி: மணிப்பூரில் 11 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

    • மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்.
    • அங்கு 72 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில் மணிப்பூரில் 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இன்னர் மணிப்பூரில் 68 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்குப்பதிவின்போது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கிருந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். வாக்கு இயந்திரங்களும் சேதப்படுத்தப்பட்டன.

    இதையடுத்து, 47 தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், வாக்கு இயந்திரங்கள் சேதம் மற்றும் துப்பாக்கிச் சூடு எதிரொலியாக மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் 22-ம் தேதி (நாளை) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×