குடியரசுத் தலைவரை சந்திக்கும் பிரதமர் மோடி- பஞ்சாப் பயணம் குறித்து பேசவுள்ளதாக தகவல்

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவலையளிப்பதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி
Published on

புதுடில்லி: 

பஞ்சாப்பில் பாதுகாப்பு விதிமீறல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசவுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றபோது ஹுசைனிவாலா அருகே அவரது கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர். இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு விதிமீறல் செய்ததாகவும், அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவலையளிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது பஞ்சாப் பயணம் குறித்து பிரதமர் மோடியிடம், குடியரசுத்தலைவர் கேட்டறியவுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com