ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இது- பிரதமர் மோடி

வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இது- பிரதமர் மோடி
Published on

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

அடுத்தக்கட்டமாக வருகிற 25-ந்தேதி 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அந்த 26 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே ஜம்மு பிராந்தியத்தில் பிரசாரம் செய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடி 2-வது முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி முதலில் ஸ்ரீநகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர், கத்ரா நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தத் தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கானது. இந்தத் தேர்தல் 'புதிய ஜம்மு-காஷ்மீரை' புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காகும்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிடிபி ஆகிய மூன்று குடும்பங்களும் சேர்ந்து பல ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. பாஜகவின் சின்னமான தாமரைக்கு அடுத்துள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் இந்தக் கட்சிகளின் அரசியல் சூரிய அஸ்தமனத்தை உறுதி செய்யும்.

அது பாஜகதான். இது உங்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, பல தசாப்தங்களாக பிராந்தியத்துடனான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com