search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீனாவை அச்சுறுத்தும் பிஎப்.7 ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவல்
    X

    சீனாவை அச்சுறுத்தும் பிஎப்.7 ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவல்

    • இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் மூன்று பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயரவில்லை

    புதுடெல்லி:

    சீனாவில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் மனித பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியாவில் பெருமளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதம் குஜராத்தில் 2 பேரும் ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மூன்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட போதிலும், நாட்டில் கோரோனா பாதிப்பு எண்ணிக்கை பெரிய அளவில் உயரவில்லை.

    சீனாவில் இந்த ஒமைக்ரான் திரிவு கவலை அளிக்கும் வகையில் வேகமாக பரவி வந்தாலும், மற்ற இடங்களில் பெரிதாக பரவவில்லை. இந்தியாவில் அக்டோபர் மாதம் பிஎப்.7 திரிபின் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. இருப்பினும், நவராத்திரி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்குப் பிறகு நாட்டில் பாதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×