சினிமா டிக்கெட், ஓடிடி சந்தா கட்டணங்களுக்கு 2 சதவீத செஸ் வரி விதிக்க கர்நாடாக அரசு முடிவு

சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது, நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.
சினிமா டிக்கெட், ஓடிடி சந்தா கட்டணங்களுக்கு 2 சதவீத செஸ் வரி விதிக்க கர்நாடாக அரசு முடிவு
Published on

கர்நாடக மாநில அரசு சினிமா டிக்கெட்டுகள், சினிமா தொடர்பான ஓடிடி சந்தா கட்டணம், கலாச்சார கலைஞர்கள் வருமானத்தின் மீது இரண்டு சதவீதம் செஸ் வரி விதிக்க பரிசீலனை செய்து வருகிறது.

மாநில அரசால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒன்றில் இருந்து இரண்டு சதவீதம் வரை செஸ் திருத்தப்படும். இந்த செஸ் வரி சினிமா டிக்கெட்டுகள், ஓடிடி சந்தாக்கள், கர்நாடகாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு ஆகியவற்றிற்கு இந்த செஸ் வரி பொருந்தும். கர்நாடக சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் (நலன்) மசோதா வெள்ளிக்கிழமை சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது மற்றும் நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

இந்த மசோதா திரைப்படத் துறையில் ஒரு கலைஞராக (நடிகர், இசைக்கலைஞர், நடனக் கலைஞர், முதலியன) அல்லது மேற்பார்வை, தொழில்நுட்பம், கலை ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு நபரும் ஒரு சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலராகக் கருதப்படுவார் எனக் கூறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com