மசோதாவில் குழப்பங்கள் உள்ளன... அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படும்- சித்தராமையா

கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் துறையில் 100 சதவீதம் பேர் கன்னடர்கள் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.கடும் விமர்சனம் எழுந்த நிலையில் மசோதா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார்.
மசோதாவில் குழப்பங்கள் உள்ளன... அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படும்- சித்தராமையா
Published on

கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்த மசோதா மீதான கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மசோதாவில் சில குழப்பங்கள் உள்ளன. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூடடத்தில் இந்த மசோதா குறித்து முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை. அதற்குள் மீடியாக்களில் செய்தி வெளியானது. அதில் சில குழப்பங்கள் உள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அதை களைவோம். விரிவான ஆலேசானை நடத்தப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்ததுபோல் கர்நாடக மாநிலத்தில் துக்ளக் அரசு இல்லை. சித்தராமையா அரசு நடக்கிறது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பரிசீலிப்போம்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா "சித்தராமையா தனது முதல் எக்ஸ் பதிவில் தனியார் செக்டாரில் 100 சதவீத இடஒதுக்கீடு என அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின் நிர்வாகப் பிரிவில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத பிரிவில் 70 சதவீதம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இறுதியாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கர்நாடகாவில் துக்ளக் ஆட்சி நடப்பதாக தெரிகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com