search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இஸ்ரோ மூலம் 5 ஆண்டில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய மந்திரி தகவல்
    X

    இஸ்ரோ மூலம் 5 ஆண்டில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன - மத்திய மந்திரி தகவல்

    • கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
    • இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் செயற்கைக்கோள்களும் அடங்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

    இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை என 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×