search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா சீனா இடையே 16வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ம் தேதி நடக்கிறது
    X

    இந்தியா சீனா பேச்சுவார்த்தை

    இந்தியா சீனா இடையே 16வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ம் தேதி நடக்கிறது

    • லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்துவருகிறது.
    • லடாக் எல்லை மோதல் தொடர்பாக இந்திய, சீன ராணுவம் இதுவரை 15 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால் இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. எனவே படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இதன் பயனாக எல்லையில் உள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்பப் பெற்றன. இதைப்போல கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடந்த 12-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை விலக்கிக்கொண்டன.

    ஆனாலும், டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது.

    இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான 16-வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் ராணுவ 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்க உள்ளார்.

    Next Story
    ×