சல்மான் கான் ஒரு கரப்பான் பூச்சியை கூட கொன்றதில்லை - 'தந்தை' சலீம் கான் விளக்கம்

1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார்.பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
salman father
Published on

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி முக்கியப் புள்ளியான பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வரும் இந்த கும்பல் சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக்கின் கதிதான் ஏற்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார். அதன் மூலமே அவர் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார். 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கியதை அடுத்து இந்த கொலை மிரட்டல் வந்தது. இந்து மதத்தின் பசு புனித விளங்காக உள்ளதுபோல் லாரன்ஸின் பிஷ்னோய் சமூகத்தில் கரும்புலி மான் என்பது புனித விலங்காகும்.

சல்மான் கான் அதை வேட்டையாடினர் என்பதனால் லாரன்ஸ் அவருடன் பகையை வளர்த்துக்கொண்டார். அதுமுதல் பல்வேறு சமயங்களில் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறிவைத்து வருகிறது.சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் தற்போது பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கை சுட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கரும்புலி வகை மான்களை சல்மான் கான் வேட்டையாடியதாக கூறப்படும் விவகாரம் குறித்து அவரது தந்தை சலீம் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சலீம் கான், "சல்மான் கானுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு கரப்பான் பூச்சியை கூட கொன்றதில்லை. சல்மான் கான் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த நாய் உடல்நலக் குறைவால் இறந்தபோது சல்மான் கான் கணீர் விட்டு அழுதார். கரும்புலி வகை மான்களை யார் கொன்றது என்று சல்மானிடம் நான் கேட்டேன். நான் அதை செய்யவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். என்னிடம் அவர் பொய் சொல்லமாட்டார். சல்மான் கான் விளையாட்டுக்காக விலங்குகளை கொள்ளும் நபர் கிடையாது.எந்த தவறும் செய்யாத சல்மான் கான் எதற்காக பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பேசியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com