என்னவும் செய்யலாம், பதவிதான் முக்கியம் என்கிறாரா நிதிஷ்?

2005ல் முதல்முறையாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் என்பது குறிப்பிடத்தக்கது
என்னவும் செய்யலாம், பதவிதான் முக்கியம் என்கிறாரா நிதிஷ்?
Published on

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பித்தார். புது அரசு உருவாகும் வரை நிதிஷ் காபந்து முதல்வராக நீடிப்பார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசியல் பயணத்தில் அதிக யு-டர்ன் அடித்த தலைவர்

2000ல் முதல் முறையாக முதல்வரான நிதிஷ், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் பதவியை துறந்தார்.

2005ல் பா.ஜ.க.வுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார்.

2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நரேந்திர மோடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய கூட்டணியில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தீவிரமாக எதிர்த்த நிதிஷ், சுமார் 17-வருட கால கூட்டணியை முறித்தார்.

தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிட்டார். ஆனால், நிதிஷ் குமாரால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து, கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அக்கட்சியின் ஜிதேன் ராம் மஞ்சி முதல்வரானார்.

2015 பீஹார் சட்டசபை தேர்தலில், தனது அரசியல் எதிரியான லல்லு பிரசாத் யாதவின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

ஆனாலும், 2016ல் பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி செயலாக்கத்தையும் லல்லு உட்பட பலர் எதிர்த்தாலும், நிதிஷ் ஆதரித்தார்.

2017ல் லல்லுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்வர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்தார். ஆனால், உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.

2020ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்.

2022 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.விற்கு மாநிலத்தில் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து கூட்டணியை மீண்டும் உடைத்தார்.

ஆனால் அடுத்த நாள், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெல்வதையும், பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவதையும் தடுக்க மோடி எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு, கடந்த வருடம், காங்கிரஸ் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளின் ஒத்துழைப்புடன் "இந்தியா கூட்டணி" எனும் பெரும் கூட்டணி உருவானது.

அந்த கூட்டணியில் மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை போல் முக்கிய உறுப்பினராக இருந்தவர் நிதிஷ் குமார்.

இந்நிலையில், தற்போது நிதிஷ் மீண்டும் முதல்வர் பதவியை துறந்து விட்டார்.

மீண்டும் தான் எதிர்த்த பா.ஜ.க.வுடன் இணைந்து அக்கட்சி பிரமுகர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி, நிதிஷ் முதல்வராக முயல்வதாக வெளியாகி உள்ள தகவல்களால் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அரசியல் வாழ்க்கையில் தான் எதிர்த்தவர்களிடமே ஆதரவு கோரி முதல்வர் பதவியில் தொடர்வது நிதிஷ் குமாருக்கு கை வந்த கலை என சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com