search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்
    X

    ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்

    • ஏழு கட்டமாக நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

    இந்நிலையில், தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், தேர்தல் வாக்குபதிவு நாளன்று பணிபுரியும் ஊடகத் துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல ஆண்டாக கோரிக்கை விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×