மக்களவை தேர்தலில் மகன் தோல்வியடைய வேண்டும் என வாழ்த்திய முன்னாள் மத்திய மந்திரி

தனது மகன் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறானது.காங்கிரஸ் என்னுடைய மதம் என்றார் ஏ.கே. அந்தோணி.
மக்களவை தேர்தலில் மகன் தோல்வியடைய வேண்டும் என வாழ்த்திய முன்னாள் மத்திய மந்திரி
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.கே. அந்தோணி. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு பா.ஜனதா மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

அனில் கே. அந்தோணியை பா.ஜனதா பத்தனாம்திட்டா தொகுதியில் நிறுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆன்டோ அந்தோணியை நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஏ.கே. அந்தோணி கூறும்போது "தனது மகன் அனில் கே. அந்தோணி தோல்விடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். எனது மகனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆன்டோ அந்தோணி வெற்றி பெற வேண்டும்.

என்னுடைய மகன் அனில் கே. அந்தோணி பா.ஜனதா கட்சியில் இணைந்தது தவறு. காங்கிரஸ் என்னுடைய மதம்.

இவ்வாறு ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

மகனின் அரசியல் பிரவேசம் மற்றும் பா.ஜனதா கட்சியில் இணைந்தது தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில் ஏ.கே. அந்தோணி இவ்வாறு அதில் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com