என் மலர்
இந்தியா

டெல்லியில் ஓங்கிய பா.ஜ.க.-வின் 'கை' - ஹாட்ரிக் '0' பதிவு செய்த காங்கிரஸ் - காரணம் என்ன?
- பாஜக 47 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 23 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
- கடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது.
கருத்துக்கணிப்புகளின்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை மீண்டும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. அந்த கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் 7 தொகுதிகளிலும் தோல்வியை தழுவின. சட்டசபை தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.
ராகுல்காந்திக்கும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடும் பனிப்போர் இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரசாரத்தின் போது மாறி, மாறி விமர்சனங்களை முன் வைத்தனர்.
அனைத்து தொகுதிகளிலும் (70) களம் இறங்கிய காங்கிரஸ் கட்சியால் இந்த முறையும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகிய 3 பேர் முயன்றும் காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. அவர்களால் எந்த தாக்கத் தையும் ஏற்படுத்த முடிய வில்லை.
இன்று காலை ஓட்டு எண்ணிகை தொடக்கத்தில் காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை வகித்தது. நேரம் செல்ல செல்ல அந்த 2 தொகுதியிலும் முன்னிலை வாய்ப்பை இழந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிவித்தது. அதன்படியே காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் (தொடர்ந்து 3-வது முறை) பூஜ்ஜியத்தை தொட்டது. இந்த தடவையும் முட்டைதான் பரிசாக கிடைத்தது.
1998 டிசம்பர் முதல் 2013 டிசம்பர் வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு இது பெரும் பின்னடைவாகும். 15 ஆண்டுகள் ஷீலா தீடசித் முதல்-மந்திரியாக பொறுப்பு வகித்தார். 2013 தேர்தலில் அந்த கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து நடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. 2015-ல் 70 தொகுதியில் போட்டியிட்டு 9.7 சதவீத வாக்குகளையும், 2020 தேர்தலில் 66 இடங்களில் போட்டியிட்டு 5.44 சதவீத வாக்குகளையும் பெற்று ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தேர்தலில் அதே நிலை நீடித்தது. தொடர்ந்து 3-வது முறையாக காங்கிர சுக்கு டெல்லி தேர்தலில் மோச மான நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டு சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த தேர்தலில் அந்த கட்சியின் ஓட்டு சதவீதம் விவரம் முழுமையான முடிவுக்கு பிறகு தெரியவரும். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நெருக்கடியான நிலையில் உள்ளது.






