search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு
    X

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

    • மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார்.
    • 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி யது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியது.

    17 அமர்வுகளாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு 21 மசோதாக்களை நிறைவேற்றியது. டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்ட மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் மசோதா, காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசுகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்க் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது என்றார். இதை தொடர்ந்து பாராளுமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மனீஷ்திவாரி எம்.பி. பேசுகையில், அரசிய லமைப்பு சட்டத்தின் 105(1) பிரிவின்படி ஒவ்வொரு எம்.பி.க்கும் பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ் பெண்டு செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோத மானது என்றார்.

    சிவசேனா எம்.பி. பிரி யங்கா சதுர்வேதி பேசுகையில், எதிர்க்கட்சியினர் பேசுவதால் பிரதமர் மோடியும் ஒட்டு மொத்த அமைச்சரவையும் எரிச்சலடைகிறார்கள். எங்கள் கூட்டணியின் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்றார்.

    காங்கிரஸ் தலைமைக் கொறடா சுரேஷ் பேசும் போது, எம்.பி.யாக இருந்த வரை சஸ்பெண்டு செய்ததன் மூலமாக பாராளுமன்ற ஜன நாயக அமைப்பை கொன்றுவிட்டார்கள் என்றார். மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசும்போது, 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    பின்னர் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மதியம் 12.30 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×