search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட்
    X

    சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி சந்திரசூட்

    • மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் சிபாரிசு செய்தார்.
    • நவம்பர் 9-ந்தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார்.

    புதுடெல்லி :

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித், அடுத்த மாதம் 8-ந்தேதி ஓய்வு பெறுகிறார்.

    அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை சிபாரிசு செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு கேட்பது வழக்கம். அதுபோல், அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யக்கோரி, கடந்த 7-ந்தேதி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதினார்.

    இந்தநிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் சிபாரிசு செய்துள்ளார். மத்திய அரசுக்கு எழுதிய அந்த சிபாரிசு கடிதத்தின் நகலை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம்யு.யு.லலித் ஒப்படைத்தார்.

    தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி சிபாரிசு செய்வது வழக்கம். அதற்கேற்ப யு.யு.லலித் சிபாரிசு செய்துள்ளார்.

    நீதிபதி சந்திரசூட், நவம்பர் 9-ந்தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் நாட்டின் 50-வது தலைமை நீதிபதி ஆவார். 2 ஆண்டுகள், அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதிவரை அப்பதவியில் இருப்பார்.

    நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் ஆவார். அவருடைய தந்தை, 1978-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 1985-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதிவரை தலைமை நீதிபதியாக இருந்தார்.

    நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தார். அமெரிக்காவில் ஹார்வர்டு சட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றார்.

    சுப்ரீம் கோர்ட்டிலும், மும்பை, குஜராத், கொல்கத்தா, அலகாபாத், மத்தியபிரதேசம், டெல்லி ஆகிய ஐகோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றினார். 1998-ம் ஆண்டு, அவரை மும்பை ஐகோர்ட்டு மூத்த வக்கீலாக அறிவித்தது. அதே ஆண்டில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆனார்.

    2000-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி, மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டார்.

    2016-ம் ஆண்டு மே 13-ந்தேதி முதல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

    Next Story
    ×