

இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் வைத்திருக்கும் நபர்கள் 7,500 கிலோ எடைக்கு மிகாமல் இருக்கக்கூடிய போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கார் உள்ளிட்ட 4 சக்கர வானங்களை ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும். அதே சமயம் லாரி போன்ற பெரிய கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகன (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
இலகுரக மோட்டார் வாகன லைசன்ஸ் (LMV) பெற்றவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், விபத்து காப்பீட்டு வழங்குவதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆகவே LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடை வரையுள்ள போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை அடுத்து, விபத்து தொடர்பான இன்சூரன்ஸ் வழக்குகளில் காப்பீடு செலுத்துபவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்று காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டின.