ரூ.170-க்கு 2½ கிலோ அரிசி தான் கிடைக்கும்: பசவராஜ் பொம்மை விமர்சனம்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அரிசி வழங்க தவறிவிட்டனர்.இலவச மின்சார திட்ட விஷயத்தில் நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
ரூ.170-க்கு 2½ கிலோ அரிசி தான் கிடைக்கும்: பசவராஜ் பொம்மை விமர்சனம்
Published on

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேர்தலின்போது ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அரிசி வழங்க தவறிவிட்டனர். அதற்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 வீதம் பணம் வழங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். ஒருவருக்கு ரூ.170 கொடுத்தால், அதற்கு கடையில் 2½ கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும்.

10 கிலோ அரிசி கொடுத்தே தீருவோம் என்று கூறி வந்தனர். இப்போது அவர்கள் தங்களின் பேச்சை காப்பாற்ற தவறிவிட்டனர். இலவச மின்சார திட்ட விஷயத்தில் நிபந்தனைகளை விதித்துள்ளனர். இதனால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com