கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி அரசியலில் இருந்து விலகல்
Published on

அரசியலில் இருந்து விலகுவதாக டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜக எம்.பி கவுதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்.பி. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "பருவ நிலை மாற்றம் தொடர்பாக பணியாற்றவுள்ளதால், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் ஆட்சி விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com