என் மலர்tooltip icon

    இந்தியா

    கூட்ட நெரிசல் எதிரொலி- 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்
    X

    கூட்ட நெரிசல் எதிரொலி- 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்

    • பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தினர்.
    • சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

    18-வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேயத்தில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு, பெங்களூருவில் திறந்தவெளி பஸ்சில் அணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தினர்.

    இதனை தொடர்ந்து 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. ஆர்சிபி ஆணியை காண வேண்டும் என்ற ஆசையில் மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்துள்ளனர்.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எம்ஜி ரோடு, ட்ரினிட்டி மெட்ரோ, சின்னசாமி ஸ்டேடியம் உள்பட 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

    Next Story
    ×