முஸ்லீம் பெண்ணுக்கு எதிராக போராட்டம் நடத்தும் 461 குடும்பங்கள்.. பின்னணி என்ன?

இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று கூறுகின்றனர்.இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லீம் பெண்ணுக்கு எதிராக போராட்டம் நடத்தும் 461 குடும்பங்கள்.. பின்னணி என்ன?
Published on

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீட்டு வசதி வாரியத்தில் இஸ்லாமிய பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு குடியேறுவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

திறன்மேம்பாடு கழகத்தில் பணி செய்து வரும் அவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வதோதராவில் உள்ள ஹர்னி பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது.

இந்த குடியிருப்பில் மொத்தம் 462 வீடுகள் உள்ள நிலையில், இஸ்லாமியர் ஒருவர் இங்கு குடியேறினால் தங்களுக்கு தேவையற்ற தொல்லையும், தங்களின் பாதுகாப்புக்கு குந்தகமும் ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதினர்.

மேலும் அந்த கடிதத்தில், ஹர்னி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 கிலோமீட்டருக்கு இஸ்லாமிய குடும்பம் ஒன்று கூட இல்லை. இப்போது இஸ்லாமியர் ஒருவரை இங்கு குடியேற்றுவது ஏற்கனவே இங்கு வசித்து வரும் 461 குடும்பங்களின் அமைதியில் தீயை வைப்பது போன்றது என்று குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பெண் குடியேறுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

7 வருடமாக இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி குடியிருப்புவாசிகள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். குடியிருப்புவாசிகளின் தொடர் எதிர்பால் இஸ்லாமியப் பெண் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com