என் மலர்
இந்தியா

சாமியார் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமின்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- ஆசாராம் பாபு ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
- ஜாமினில் இருக்கும்வரை அவர் ஆதரவாளர்களை சந்திக்கக் கூடாது என தெரிவித்தது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதற்கிடையே, வயது மூப்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்நிலையில், ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், ஜாமினில் இருக்கும்வரை அவர் ஆதரவாளர்களை சந்திக்கக் கூடாது எனவும் தெரிவித்தது.






