search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரசிலிருந்து மேலும் 20 பேர் ராஜினாமா
    X

    குலாம்நபி ஆசாத்

    குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரசிலிருந்து மேலும் 20 பேர் ராஜினாமா

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் குலாம் நபி ஆசாத் விலகினார்.
    • அவருக்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகி விட்டனர்.

    எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகி வருகின்றனர்.

    இந்நிலையில், குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் 20 பேர் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    Next Story
    ×