search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது
    X

    குஜராத்தில் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது

    • மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    • நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

    குஜராத் கடல் பகுதியில் இன்று 173 கிலோ போதைப் பொருட்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.

    போதைப் பொருள் கடத்தப் பயன்படுத்திய இந்திய மீன்பிடி படகில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல், நேற்று சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இதன் மதிப்பு 600 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×