நாமக்கல்லில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று 5,200 மூட்டை பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.
நாமக்கல்லில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
Published on

நாமக்கல்: 

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாம கிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 5 ஆயிரத்து 200 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

இந்த பருத்தி மூட்டைகள் சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 995 முதல் ரூ.5 ஆயிரத்து 612 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 750 முதல் ரூ.6 ஆயிரத்து 840 வரையிலும் ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com