மதுபான இருப்பை சமர்பிக்க புதிய இணையதளம்- அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்

புதுவையில் மதுக்கடை உரிமையாளர்கள் இருப்புகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய புதிய இணையதளத்தை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார்.
அமைச்சர் நமச்சிவாயம்
அமைச்சர் நமச்சிவாயம்
Published on

புதுச்சேரி:

புதுவையில் மதுக்கடை உரிமையாளர்கள் இருப்புகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய புதுவை கலால் என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தை அமைச்சர் நமச்சிவாயம் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருண், கலால் துறை துணை ஆணையர் சஷ்வத்சவ்ரப், மதுக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மதுக்கடை உரிமையாளர்கள் தற்போது மாதம் ஒரு முறை சரக்கு இருப்பு விபரங்களை காகித முறையில் அளிக்கின்றனர்.

இனிமேல் இந்த புதிய இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு சரக்கு விற்றது, மீதமுள்ள இருப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் அடுத்த கட்டமாக பார்கோடிங் மூலம் விற்கும் போதே இருப்புகள் அப்டேட் செய்ய அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கூட்டத்தில் மதுபான கடை உரிமையாளர்கள் அமைச்சர் நமச்சிவாயத்திடம், 56 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகளை திறக்க உள்ளோம். ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. எனவே சரக்கு இருப்பு விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையேற்ற அமைச்சர் நமச்சிவாயம் ஜூன் 1-ந் தேதி முதல் அனைத்து சரக்கு இருப்புகளை ஆன்லைனில் பதவிவேற்றம் செய்ய வேண்டும். அதுவரை இருப்புகளை கலால்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com