ஒரத்தநாடு அருகே 3 குழந்தைகளின் தாய் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

ஒரத்தநாடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே 3 குழந்தைகளின் தாய் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் அரிசன காலனியை சேர்ந்தவர் விக்ரம் (வயது 35). விவசாயி. இவரது மனைவி விமலா (30). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

விமலா மன்னார்குடி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவரது நடத்தையில் கணவர் விக்ரம் சந்தேகப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இரவு விமலா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் தொங்கியது.

இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விமலா உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஒரத்த நாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விமலாவின் கணவர் விக்ரம் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவர் விமலாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com