முத்தியால்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

முத்தியால்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை மெயின்ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சின்னகோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்கிற வெங்கடேஷ் (வயது 22) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு ஓட்டி வந்ததும் அம்பலமானது. இதையடுத்து வெங்கடகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com