ஒரே நாடு ஒரே ரே‌சன் கார்டு திட்டம் தேவையற்றது - முத்தரசன்

ஒரே நாடு ஒரே ரே‌சன் கார்டு திட்டம் தேவையற்றது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
முத்தரசன்
முத்தரசன்
Published on

புதுக்கோட்டை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வருகிற 2-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினை, 7 பேர் விடுதலை தொடர்பான பிரச்சினை, நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும், கர்நாடக அரசு இதை செயல்படுத்த மறுக்கிறது. கர்நாடகா தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டால் குற்றங்களை தடுக்க முடியும்.மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ள ஒரே நாடு ஒரே ரே‌சன் என்ற திட்டம் தேவையற்றது. தற்போது உள்ள தேர்தல் நடைமுறைகளை மாற்ற வேண்டும். விகிதாச்சார முறையில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விகிதாச்சார முறையில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கி உள்ளது என்பதை பார்த்து அரசுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் இத்தகைய முறையைத்தான் பின்பற்ற வேண்டும்.

சட்டமன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த மு.க.ஸ்டாலினே தற்போது வலியுறுத்தவில்லை என கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவானது தமிழக அரசுக்கு ஏதோ ஒரு வகையில் பின்விளைவை ஏற்படுத்தக் கூடும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com