

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதனால் இலங்கை அணியை வெற்றிப் பாதையில் மீண்டும் கொண்டு வர ஆலோசனை வழங்க வேண்டும் என்று முரளிதரன், ஜெயர்வதனேயிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால், இருவரும் ஆலோசனை வழங்கும் பணியில் சேர மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து முரளிதரன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் நிர்வாகம் மோசனமான நிலையில் இருக்கும்போது, எங்களை அழைப்பது நேர்மையற்ற, தந்திரமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.